Wednesday, 6 March 2013

மேற்குத் தொடர்ச்சி மலை


மேற்குத் தொடர்ச்சி மலை

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி, ஆனைமலை, பொதிகைமலை, கலக்காடு  போன்ற மலைப் பிரதேசங்கள், காடுகள், ஏரிகள், நதிகள்சதுப்பு நிலங்கள் போன்ற பல்வேறு விதமான இயற்கை வளங்கள் அடங்கிய மெற்கு தொடர்ச்சி மலை பல உயிரினங்கள் வாழ கரணமாக உள்ளது.
இந்த மலை தொடர் அண்மையில் உலகப் பரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த மலை தொடர் பல்வேறு வன உயிர்களுக்கு மட்டும் வழ்வாதாரமாக மட்டும் இல்லாமல் மனித வாழ்விற்கும் இன்றியமையாததாக உள்ளது.
அம்மலைதொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி இலங்கை வரை நீட்டிக்கிறது. எண்ணற்ற ஆறுகளுக்கு (நர்மதா,

தபதி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, காவேரி)  ஆதாரங்களாகவும் விளங்குகிறது. அத்தொடர் பல்லூயிர்ப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தொடரில் ஈடு இனையற்ற செல்வங்கள் நிறைந்துள்ளது. அதாவது மரங்களாகவும், விலங்குகளாகவும் நிறைந்துள்ளது.

இதில் மருத்துவ குணமுள்ள மரங்களும், செடிகளும் அதிகம். இது பல பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும், ஊர்வனகளுக்கும் வாழ்விடமாக அமைந்துள்ளது.
தற்போது இத்தொடர் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள காடுகளையும், விலங்குகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment