நெல்லிக்கனி
Emblica officinalis
Phyllanthaceae
தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப் போக்குகிறது. இந்தியப் பெண்கள் பொதுவாக நெல்லிக்கனி அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOiL-v8AJQTJyE4_NV5FTilt3aRAEg14SpsC2Sf0-JVYR1L8dKU_v_LmJ9PEWov7UGAPm6EoE_5cHz-dP8WWgO_y_6CPIVfssTb_pFomK6NF9QMmfieFw7x9NybQ5AEV9PNRaSFMVqo77c/s1600/images.jpg)
கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.
ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
No comments:
Post a Comment