Thursday, 14 March 2013

மகத்துவம் தரும் மஞ்சள்



மகத்துவம் தரும் மஞ்சள்

மஞ்சளை `ஏழைகளின் குங்குமப்பூ' அப்படின்னு அழைக்கிறாங்க. காரணம், அதிக விலைக்கு விற்கப்படும் குங்குமப்பூ தர்ற அதே பலன்களை, குறைஞ்ச விலையில கிடைக்கும் மஞ்சளும் தருகிறது. நம் இந்தியப் பண்பாட்டோட அடையாளமா மஞ்சளை குறிப்பிடுறாங்க. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது சிந்து சமவெளி நாகரிக காலத்துலேயே ஹரப்பா பகுதியில மஞ்சள் பயிரிடப்பட்டதா வரலாறுகள் உண்டு.
 
மங்கலப் பொருட்களில் மஞ்சள் முதலிடம் வகிக்குது. இந்தியப் பெண்கள் மஞ்சளை அதிக அளவுல பயன்படுத்துறாங்க. தோல் பிரச்சினை எது வந்தாலும் கிராமப்புற மக்கள் முதலில் தேடுவது மஞ்சளைத்தான்.
 
*மஞ்சளை யும், சந்தனத்தையும் கலந்து முகத்துல தடவி வந்தால் மினுமினுப்பு கூடும்; கரும்புள்ளி பிரச்சினையும் இருக்காது.
 
*அடிபட்ட காயங்கள்ல மஞ்சளைப் பூசினா, ரத்தம் கசிவது உடனே நிற்கும். சிராய்ப்புகள், கொப்புளங்கள், கட்டிகள் என எல்லாவற்றுக்குமே மஞ்சள் சிறந்த மருந்தாக அமையுது. நம்முடைய தினசரி சமையல்ல மஞ்சள் கட்டாய இடம்பெறும்.
 
மஞ்சளுக்கு, ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. நம்மையும் அறியாம உணவு மூலமா கிருமிகளோ, அசுத்தங்களோ குடலுக்குள் போய்விட்டால், அவற்றை அழிக்கிற ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. கொலஸ்ட்ராலும், சோடியமும் மஞ்சள்ல குறைவா இருக்கு.
 
ஆனால், `வைட்டமின் சி' மற்றும் மக்னீசியம் தாது அதிகமா இருக்கு. மஞ்சளுக்கு புற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கூட இருக்குறது ஆராய்ச்சியில கண்டு பிடிக்கப்பட்டிருக்கு. 

No comments:

Post a Comment